
தவறான சிகிச்சையால் சிறுவனின் பிறப்புறுப்பு அகற்றப்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு
எழுத்தாளர் Sivagangai Admin · 6 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 6-
காரைக்குடி புதுசந்தையை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம், தனலெட்சுமி. இவர்களுக்கு 10 வயதில் சாய்ஹரிஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது. அவருக்கு கடந்த மாதம் சிறுநீர் கழிக்கும் ஆண் உறுப்பில் அரிப்பு ஏற்பட்டதால் காரைக்குடி தாலுகா அலுவலக சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று பார்த்த போது, அவர் ஆண் உறுப்பில் உள்ள தோலை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்படி கடந்த மே மாதம் 21-ம் தேதி அதே மருத்துவமனையில் வேறு ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பிறகு சிறுவனின் ஆண் உறுப்பு கருத்துள்ளது. சிறுநீர் போகாமல் வலியால் சிறுவன் துடித்துள்ளான். இதையடுத்து பெற்றோர் காரைக்குடி தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள மருத்துவமனை டாக்டரிடம் காண்பித்துள்ளனர். அவர் நான் ஆப்ரேஷன் செய்யவில்லை. ஆப்ரேஷன் செய்த மருத்துவரிடம்தான் நீங்கள் சென்று காட்ட வேண்டும் என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார். அங்கு பெற்றோர் சிறுவனை அழைத்து சென்றபோது, அவர்கள் அட்மிஷன் போட்டு, தையலை மயக்கமருந்து கொடுத்து நீக்கியுள்ளனர். இதுனால் சிறுவனுக்கு வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்கள் டாக்டர்களிடம் கேட்க அவர்கள் மதுரையில் நாங்கள் சொல்லும் மருத்துவமனையில் காண்பியுங்கள் என கூறி அலைக்கழித்துள்ளனர். சிறுவனின் பெற்றோர் அந்த மருத்துவமனைக்கு செல்லாமல் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் உள்ள யூராலஜி டாக்டரிடம் காண்பித்தபோது, மருத்துவர்கள் ஆண் உறுப்பு பகுதி கருத்து பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. உடனடியாக அந்த பகுதியை ஆப்ரேசன் மூலம் நீக்கி ஆக வேண்டும் இல்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் உயிரை காப்பாற்றினால் போதும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டு ஆப்ரேஷன் செய்ய ஒப்புக் கொண்டனர். ஆப்ரேஷன் முடிவில் சிறுவனின் பிறப்புறப்பு அகற்றப்பட்டது.
காரைக்குடியில் உள்ள இரண்டு டாக்டர்களும் இணைந்து தவறான ஆப்ரேசன் செய்து விட்டு தவறை மறைத்து என் மகனின் எதிர்கால வாழ்க்கையை அழித்து விட்டனர். இந்த நிலைக்கு தள்ளிய மருத்துவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து மகனுக்கு நீதி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி பெற்றோர் காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியாவிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026