
தவறான சிகிச்சையால் சிறுவனின் பிறப்புறுப்பு அகற்றப்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு
எழுத்தாளர் Sivagangai Admin · 6 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 6-
காரைக்குடி புதுசந்தையை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம், தனலெட்சுமி. இவர்களுக்கு 10 வயதில் சாய்ஹரிஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது. அவருக்கு கடந்த மாதம் சிறுநீர் கழிக்கும் ஆண் உறுப்பில் அரிப்பு ஏற்பட்டதால் காரைக்குடி தாலுகா அலுவலக சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று பார்த்த போது, அவர் ஆண் உறுப்பில் உள்ள தோலை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்படி கடந்த மே மாதம் 21-ம் தேதி அதே மருத்துவமனையில் வேறு ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பிறகு சிறுவனின் ஆண் உறுப்பு கருத்துள்ளது. சிறுநீர் போகாமல் வலியால் சிறுவன் துடித்துள்ளான். இதையடுத்து பெற்றோர் காரைக்குடி தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள மருத்துவமனை டாக்டரிடம் காண்பித்துள்ளனர். அவர் நான் ஆப்ரேஷன் செய்யவில்லை. ஆப்ரேஷன் செய்த மருத்துவரிடம்தான் நீங்கள் சென்று காட்ட வேண்டும் என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார். அங்கு பெற்றோர் சிறுவனை அழைத்து சென்றபோது, அவர்கள் அட்மிஷன் போட்டு, தையலை மயக்கமருந்து கொடுத்து நீக்கியுள்ளனர். இதுனால் சிறுவனுக்கு வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்கள் டாக்டர்களிடம் கேட்க அவர்கள் மதுரையில் நாங்கள் சொல்லும் மருத்துவமனையில் காண்பியுங்கள் என கூறி அலைக்கழித்துள்ளனர். சிறுவனின் பெற்றோர் அந்த மருத்துவமனைக்கு செல்லாமல் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் உள்ள யூராலஜி டாக்டரிடம் காண்பித்தபோது, மருத்துவர்கள் ஆண் உறுப்பு பகுதி கருத்து பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. உடனடியாக அந்த பகுதியை ஆப்ரேசன் மூலம் நீக்கி ஆக வேண்டும் இல்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் உயிரை காப்பாற்றினால் போதும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டு ஆப்ரேஷன் செய்ய ஒப்புக் கொண்டனர். ஆப்ரேஷன் முடிவில் சிறுவனின் பிறப்புறப்பு அகற்றப்பட்டது.
காரைக்குடியில் உள்ள இரண்டு டாக்டர்களும் இணைந்து தவறான ஆப்ரேசன் செய்து விட்டு தவறை மறைத்து என் மகனின் எதிர்கால வாழ்க்கையை அழித்து விட்டனர். இந்த நிலைக்கு தள்ளிய மருத்துவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து மகனுக்கு நீதி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி பெற்றோர் காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியாவிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது

ராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்பு
குவாரி உரிமைத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் வருவதை அறிந்து நடவடிக்கை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்தி
மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி
18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி
காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு
18 ஜூலை, 2026
மாவட்ட செய்திகல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திபுதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திதொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி
27 ஜூன், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
26 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
24 ஜூன், 2026
மாவட்ட செய்தி
காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
24 ஜூன், 2026
மாவட்ட செய்திதிரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
24 ஜூன், 2026
மாவட்ட செய்திசமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்
20 ஜூன், 2026