முகப்பு
ஞாயி., 19 ஜூலை, 2026
காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டிகாரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி
சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்

சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்

எழுத்தாளர் Sivagangai Admin · 20 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 20- 2025-2026-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா காரைக்குடியில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்றார். இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் பிரபு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். அவர் பேசுகையில், முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு மாணவர்களிடம் உரையாடுவது மிகவும் பிடிக்கும். அவ்வாறு மாணவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மாணவர் கேட்டார், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை என்றால் என்ன? உங்கள் விளக்கத்தை கூறுங்கள்’’ என்றார். அதற்கு அவர், சிவசுப்பிரமணிய ஐயர் என்ற ஆசிரியரால் அடிப்படை கல்வி கற்று, அய்யாத்துரை சாலமோன் என்ற கிறிஸ்தவ ஆசிரியரால் அறிவியல் கற்பிக்கப்பட்டு, அப்துல்கலாம் என்ற நான் இந்திய ஜனாதிபதியாக பதவி வகிப்பதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்றார். ஒரு ஆசிரியர் மாணவரை மட்டுமல்ல, சமுதாயத்தை உருவாக்குகிறவர்கள். நாட்டை ஆள்வதிலிருந்து, நிர்வகிப்பது வரை ஆசிரியர்களின் கைவண்ணம் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பல மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்குஉள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி. சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 10-ம் வகுப்பில் முதலிடம், 12-ம் வகுப்பில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இதற்கு காரணமாகவும், அரும்பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி. பெருமை சேர்க்கும் கல்வியை மாணவர்களுக்கு கொடுத்துள்ளனர்.
அடுத்த முறையும் இதை விட சிறப்பாக செய்ய வேண்டும். 100 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். மாநில அளவில் முதல் இடம் இரண்டாம் இடம் என்பதை சிவகங்கை மாவட்டத்திலிருந்து கொடுக்க வேண்டும். முதல்வரிசையில் எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் உள்ளனர். ஒரு மாணவனாக என் ஆசிரியருக்கு நான் மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கும் நன்றி, என்றார். தொடர்ந்து அவருக்கு கற்பித்து கொடுத்த செம்பனூர் அரசு பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியர் கணேசனை அழைத்து அவரை பெருமைப்படுத்தினார். அழகப்பா மெட்ரிக்., பள்ளயில் இயற்பியல் ஆசிரியராக கணேசன் பணியாற்றியபோது தற்போதைய அமைச்சர் பிரபு அவரிடம் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 2500 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் எம்.எல்.ஏ., ஆர்.சீனிவாசசேதுபதி, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.குழந்தைராணி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் டி.இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்க நிலை தேவகோட்டை செந்தில்குமரன், தனியார் பள்ளிகள் வடிவேல், தொடக்க நிலை சிவகங்கை ராசேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(16)

மாவட்ட செய்தி

மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி

18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி

காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு

18 ஜூலை, 2026
கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு  தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபுமாவட்ட செய்தி

கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு

10 ஜூலை, 2026
காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில்  இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.மாவட்ட செய்தி

காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.

10 ஜூலை, 2026
புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்மாவட்ட செய்தி

புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

10 ஜூலை, 2026
தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழாமாவட்ட செய்தி

தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா

29 ஜூன், 2026
கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்மாவட்ட செய்தி

கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்

29 ஜூன், 2026
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி

29 ஜூன், 2026
காரைக்குடி நகர் பகுதியில்  கல்லால் தாக்கி வாலிபர் கொலைமாவட்ட செய்தி

காரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை

29 ஜூன், 2026
காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி

27 ஜூன், 2026
போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்மாவட்ட செய்தி

போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்

26 ஜூன், 2026
காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது  கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்

25 ஜூன், 2026
கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள்  ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிமாவட்ட செய்தி

கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

25 ஜூன், 2026
காரைக்குடியில்  கண்ணதாசன் பிறந்த நாள் விழாமாவட்ட செய்தி

காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

24 ஜூன், 2026
மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

24 ஜூன், 2026
திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில்  வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்மாவட்ட செய்தி

திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்

24 ஜூன், 2026