முகப்பு
ஞாயி., 19 ஜூலை, 2026
காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டிகாரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி
சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி  பட்டமளிப்பு விழா;

சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா;

15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நட்டு இந்திய சாதனை

எழுத்தாளர் Sivagangai Admin · 15 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 15 - காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 6-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவும், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு நிகழ்ச்சிக்காக 15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நடும் விழாவும் நடந்தது. கல்லூரி தலைவர் முனைவர் சேது குமணன் தலைமை வகித்தார். முதல்வர் பேபி ராணி வரவேற்று பேசினார். விழாவின் சிறப்பு விருந்தினராக மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாராஜா ஸ்ரீ யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் ( நாடாளுமன்ற உறுப்பினர் மைசூர் குடகு தொகுதி) பட்டமளிப்பு உரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களது அறிவு, திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஒருங்கிணைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கும், நிலையான வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும் என்றார். மியான்மர் குடியரசின் கௌரவத் தலைவர் பேராசிரியர் ஜெ. ரங்கநாதன், மருத்துவத் தரப்படுத்தல் துணைக்குழு மற்றும் யுனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான துணைக்குழுத் தலைவர் முனைவர் இராஜேந்திரன் ஆனைமுத்து, டிஜி அக்ரிகான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்வி மற்றும் இணைப்பாடச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்கள், அறக்கட்டளை விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது செ. அழகுமீனா மற்றும் ரா. சுபாஷினி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கல்வி மற்றும் இணைப்பாடச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக சேது பாஸ்கரன் சிறப்புச் சான்றிதழ் விருது எஸ்.ஐரின் ஐஸ்டினாவிற்கு வழங்கப்பட்டது. டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், டாக்டர் பி. வசந்தராஜ் டேவிட், டாக்டர் சி.வி. சுப்பிரமணியன், டாக்டர் ரத்தன்லால், டாக்டர் கிரிகோர் மெண்டல், டாக்டர் ஜி.எஸ். ரந்தாவா மற்றும் டாக்டர் அமர்த்யா சென் ஆகியோரின் பெயர்களில் நிறுவப்பட்ட விருதுகளும், சேது ஐராணி அம்மாள் பெயரில் சிறப்புச் சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு முயற்சியின் ஒரு பகுதியாக, கல்லூரி பண்ணை வளாகத்தில் 15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நடப்பட்டது. மைசூர் மகாராஜா ஸ்ரீ யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), ஸ்ரீ ராஜா ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமராவதி புதூர், ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி அமராவதி புதூர், சேது ஐராணி மெட்ரிகுலேஷன் பள்ளி, கண்டரமாணிக்கம் சேது பாஸ்கரா தொழிற்பயிற்சி நிறுவனம் (ITI), கண்டரமாணிக்கம், எம்.ஏ.பி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி கண்டரமாணிக்கம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, விசாலையன்கோட்டை ஆகிய கல்வி மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு மேலாளர் முனைவர் யு. இராஜேஷ், பொதுமேலாளர் முனைவர் பா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நடப்பட்ட சாதனையை உறுதிப்படுத்தி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனைச் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர். மேலும், கல்வி, சமூகப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்காக, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் "மாஸ்டர் மைண்ட் விருது" சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிறுவனத்தின் தலைவர் முனைவர் சேது குமணனுக்கு வழங்கப்பட்டது.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

மாவட்ட செய்தி

மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி

18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி

காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு

18 ஜூலை, 2026
கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு  தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபுமாவட்ட செய்தி

கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு

10 ஜூலை, 2026
காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில்  இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.மாவட்ட செய்தி

காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.

10 ஜூலை, 2026
புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்மாவட்ட செய்தி

புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

10 ஜூலை, 2026
தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழாமாவட்ட செய்தி

தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா

29 ஜூன், 2026
கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்மாவட்ட செய்தி

கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்

29 ஜூன், 2026
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி

29 ஜூன், 2026
காரைக்குடி நகர் பகுதியில்  கல்லால் தாக்கி வாலிபர் கொலைமாவட்ட செய்தி

காரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை

29 ஜூன், 2026
காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி

27 ஜூன், 2026
போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்மாவட்ட செய்தி

போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்

26 ஜூன், 2026
காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது  கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்

25 ஜூன், 2026
கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள்  ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிமாவட்ட செய்தி

கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

25 ஜூன், 2026
காரைக்குடியில்  கண்ணதாசன் பிறந்த நாள் விழாமாவட்ட செய்தி

காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

24 ஜூன், 2026
மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

24 ஜூன், 2026
திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில்  வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்மாவட்ட செய்தி

திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்

24 ஜூன், 2026
சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்மாவட்ட செய்தி

சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்

20 ஜூன், 2026