சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது
பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் செல்போனை கொடுத்து சமூக வலைதளத்தை காட்டியும் திண்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை
எழுத்தாளர் Sivagangai Admin · 5 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 4-
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அடுத்த கொத்தமங்கலக்தில் படைப்பு வீடு ஒன்றில் 2020 ஆண்டு முதல் 2023 வரை திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் காவல்காரகளாக பணியாற்றி வந்தனர். அவ்வப்போது கணவர் சமையல் வேலைக்கும், மனைவி விவசாய கூலிக்கும் சென்ற நிலையில் அவர்களது மகளான சிறுமியை,கணக்கப் பிள்ளையாக இருந்த சுப்பிரமணியன் (வயது 62 ) youtube பார்க்க வைத்தும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் புகார் ஏதும் அளிக்காமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருமயம் அருகில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்
இது குறித்து படைப்பு வீட்டில் காவலாளி பணிக்கு தம்பதியினரை வேலைக்கு சேர்த்து விட்ட முருகப்பன் என்பவர், ஏன் சொல்லாமல் வேலையை விட்டு சென்றீர்கள் என்று கேட்டபோது
தங்கள் மகளை 6 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து மூன்றாண்டுகளாக பலமுறை கணக்குப்பிள்ளை சுப்பிரமணி பாலியல் துன்புறுத்தல் செய்ததால் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தைரியம் கொடுத்த முருகப்பன் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோரை புகார் அளிக்க வைத்தார். மகளிர் காவல் ஆய்வாளர் குற்றவாளி சுப்பிரமணியனிடம் விசாரணை செய்த பொழுது, சுப்பிரமணியன் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது

ராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்பு
குவாரி உரிமைத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் வருவதை அறிந்து நடவடிக்கை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்தி
மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி
18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி
காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு
18 ஜூலை, 2026
மாவட்ட செய்திகல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திபுதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திதொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி
27 ஜூன், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
26 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
24 ஜூன், 2026
மாவட்ட செய்தி
காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
24 ஜூன், 2026
மாவட்ட செய்திதிரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
24 ஜூன், 2026
மாவட்ட செய்திசமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்
20 ஜூன், 2026