
காரைக்குடி சிறுவனின் பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை விவகாரம்: ‘மருத்துவர்கள் முறையாகவே சிகிச்சை அளித்தனர்
ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஸ்ரீதர் பேட்டி
எழுத்தாளர் Sivagangai Admin · 10 ஜூன், 2026
3 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 10-
காரைக்குடியில் பிறப்புறுப்பு சிகிச்சையில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மருத்துவர்கள் எந்த தவறும் செய்யவில்லை, மிக அரிதாக 10 லட்சத்தில் ஒரு நோயாளிக்கு ஏற்படும் ஒன்றாகும், என இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் ஸ்ரீதர் காரைக்குடியில் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது : மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் செல்வன் சாய் ஹரிஷ் என்ற பத்து வயது சிறுவன் மரு. சோமசுந்தரம் அவர்களுடைய மருத்துவ மனையில் 21/05/26 அன்று ஆண் குறியில் ஒரு அறுவை சிகிச்சைக்காக காலை ஏழு மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அன்று காலையே அனுபவமிக்க அறுவை சிகிச்சை நிபுணர் மரு. காமாட்சி சந்திரனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மயக்க மருத்துவ இயல் நிபுணர் மரு. குலாம் அலி உடன் இருந்து சிகிச்சை மேற்கொண்டார். மேற்கூறிய மருத்துவர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த துறைகளில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் மறு நாள் 22/05/26 டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அறுவை சிகிச்சை செய்த இடம் ஆரோக்கியமாகவே காணப் பட்டது. 26/05/26 அன்று இரவு 7.30 மணி அளவில் சிறுவன் மறு பரிசோதனைக்கு அழைத்து வரப் பட்டார். மருத்துவர் சோதித்து பார்த்த போது காயத்தில் இரத்த ஓட்டம் சீராக இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கே.எம்.சி மருத்துவமனை செல்ல பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் மறுநாள் காலைதான் (27/05/26) கே.எம்.சி மருத்துவமனை சென்றார்கள். காயத்தை ஆய்வு செய்த போது இரத்த ஓட்டம் குறைவது உறுதி செய்யப் பட்டது. அதனை சரி செய்ய சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் உதவி தேவை என்பதால் 28/05/26 அன்று மதுரையில் இதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் சென்று காண்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு அவருக்கு ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை உட்பட சிறந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது காயம் ஆறி வருகிறது. சிறுவன் சாய் ஹரிஷ்-க்கு செய்ய பட்ட அறுவை சிகிச்சை எளிதாகவும் எங்கும் பரவலாகவும் செய்யப் படும் சிகிச்சை ஆகும். அவருக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினை மிகவும் அரிதாக பத்து இலட்சம் நோயாளிகளில் ஒருவருக்கு ஏற்படும் ஒன்றாகும். இது திடீரென இரத்த ஓட்டம் குறைவதால் (vasospasm) உண்டாகும் ஒரு அரிதான அமைப்பு.
இதனால் சிறுவன் சாய் ஹரிஷ்-க்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு எங்கள் இந்திய மருத்துவ சங்கம் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆனால் இந்த சிகிச்சையில் எங்கள் மருத்துவர்கள் எந்த ஒரு அலட்சியத்தையும் காட்டவில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய இந்த பாதிப்பில் எந்த ஒரு தாமதத்தினையும் காட்டாமல் உயர் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும் இந்த சிகிச்சையில் ஆண் குறி முழுமையாக நீக்கப் படவில்லை. ஒரு சிறு பகுதி மட்டுமே நீக்கப் பட்டு ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் நுண்ணிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாளடைவில் ஆண் குறியில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாடு சீராகும் என்று சிறப்பு அறுவை சிகிச்சை செய்த நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஆண்குறி ஆற வேண்டும் என்ற அடிப்படையில் பதியம் செய்யப்பட்டுள்ளது. திசுக்கள் வளரும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுவதும் அகற்றப்படவில்லை. எனவே இந்த சிகிச்சையில் எந்த ஒரு அலட்சியத்தையும் எங்கள் மருத்துவர்கள் காட்டவில்லை என்று உறுதி கூறும் அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் சாய் ஹரிஷ் மேலும் சிகிச்சை பெற எல்லாவிதமான உதவிகளையும் செய்ய சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உடன் இருப்பார்கள் என்று கூறிக் கொள்கிறோம், என்றார்.
உடன் மருத்துவர்கள் சுரேந்திரன், காமாட்சி சுந்தரம், சோமசுந்தரம் மற்றும் பலர் இருந்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது

ராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்பு
குவாரி உரிமைத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் வருவதை அறிந்து நடவடிக்கை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்தி
மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி
18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி
காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு
18 ஜூலை, 2026
மாவட்ட செய்திகல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திபுதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திதொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி
27 ஜூன், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
26 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
24 ஜூன், 2026
மாவட்ட செய்தி
காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
24 ஜூன், 2026
மாவட்ட செய்திதிரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
24 ஜூன், 2026
மாவட்ட செய்திசமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்
20 ஜூன், 2026