
காரைக்குடி10 வயது சிறுவனுக்குதவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவர்கள் இருவர்மீது வழக்குபதிவு
எழுத்தாளர் Sivagangai Admin · 8 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 8-
காரைக்குடி தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் சிறுவன் பிறப்பு உறுப்பு இழந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் காரைக்குடி மீது வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர் தனியார் நகை பட்டறையில் பணிபுரிகிறார். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களது 10 வயது மகனுக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால், பிறப்புறுப்பை (ஆண் உறுப்பை ) இழந்ததாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியாவிடம் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில், எங்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளான். அவனுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவனுக்கு மே 21-ம் தேதி அறுவைசிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே எனது மகனின் பிறப்புறுப்பு அழுகியது. இதுகுறித்து அறுவைசிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் கூறினேன். அப்போது, வேறொரு மருத்துவர் தான் அறுவைசிகிச்சை செய்ததாக கூறி, அவரது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றபோது அந்த மருத்துவரும் முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்தார். அதற்குள் எனது மகனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம்.
அங்கு மருத்துவர்கள் எனது மகனின் பிறப்புறுப்பு அழுகிவிட்டதால், அகற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று கூறிவிட்டனர். நாங்களும் எனது மகனை காப்பாற்றுவதற்காக வேறுவழியின்றி ஒப்புக் கொண்டோம். பின்னர் அறுவைசிகிச்சை செய்து பிறப்புறுப்பை அகற்றிவிட்டனர். தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் எனது மகனின் வாழ்க்கையே பாழாய்போய்விட்டது.
இதனால் தனியார் மருத்துவமனை மீதும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடி வடக்கு போலீசார் இரு மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது

ராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்பு
குவாரி உரிமைத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் வருவதை அறிந்து நடவடிக்கை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்தி
மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி
18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி
காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு
18 ஜூலை, 2026
மாவட்ட செய்திகல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திபுதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திதொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி
27 ஜூன், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
26 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
24 ஜூன், 2026
மாவட்ட செய்தி
காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
24 ஜூன், 2026
மாவட்ட செய்திதிரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
24 ஜூன், 2026
மாவட்ட செய்திசமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்
20 ஜூன், 2026