
காரைக்குடி10 வயது சிறுவனுக்குதவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவர்கள் இருவர்மீது வழக்குபதிவு
எழுத்தாளர் Sivagangai Admin · 8 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 8-
காரைக்குடி தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் சிறுவன் பிறப்பு உறுப்பு இழந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் காரைக்குடி மீது வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர் தனியார் நகை பட்டறையில் பணிபுரிகிறார். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களது 10 வயது மகனுக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால், பிறப்புறுப்பை (ஆண் உறுப்பை ) இழந்ததாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியாவிடம் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில், எங்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளான். அவனுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவனுக்கு மே 21-ம் தேதி அறுவைசிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே எனது மகனின் பிறப்புறுப்பு அழுகியது. இதுகுறித்து அறுவைசிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் கூறினேன். அப்போது, வேறொரு மருத்துவர் தான் அறுவைசிகிச்சை செய்ததாக கூறி, அவரது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றபோது அந்த மருத்துவரும் முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்தார். அதற்குள் எனது மகனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம்.
அங்கு மருத்துவர்கள் எனது மகனின் பிறப்புறுப்பு அழுகிவிட்டதால், அகற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று கூறிவிட்டனர். நாங்களும் எனது மகனை காப்பாற்றுவதற்காக வேறுவழியின்றி ஒப்புக் கொண்டோம். பின்னர் அறுவைசிகிச்சை செய்து பிறப்புறுப்பை அகற்றிவிட்டனர். தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் எனது மகனின் வாழ்க்கையே பாழாய்போய்விட்டது.
இதனால் தனியார் மருத்துவமனை மீதும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடி வடக்கு போலீசார் இரு மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026