ஆவணப் பதிவுக்கு லஞ்சமா? காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை; சிக்கிய தரகர்
🎙️ காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை காரைக்குடி இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான குழு திடீர் சோதனை நடத்தியது. சோதனையில் தனியார் டாக்குமெண்ட் ரைட்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு புரோக்கரிடம் கணக்கில் வராத ₹73 ஆயிரம் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.