
ரூ 2500 இலவசம் எங்களுக்கு வேண்டாம் பிள்ளைகளை காப்பாற்ற மதுக்கடை மூட வேண்டும்
காரைக்குடி அருகே மித்திராவயல் கிராமத்தில் பெண்கள் முற்றுகை
எழுத்தாளர் Sivagangai Admin · 8 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 8-
காரைக்குடி அருகே மித்திராவயல் கிராமத்தில் அரசு மதுபான கடை (கடை எண் 7653) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்திவிட்டு கிராமத்து இளைஞர்கள் அதிக அளவில் சாலை விபத்திலும் உடல் பாதிப்பு ஏற்பட்டு பலியாகி உள்ளதால் மாவட்டத்தில் இந்த கிராமத்தில் ஏராளமான இளம் விதவைகள் இருக்கின்றனர். குடிப்பழக்கத்தால் ஆண்பிள்ளைகளுக்கு பெண் தர பிற ஊர்களை சேர்ந்தவர்கள் மறுப்பதால் பலர் திருமணம் ஆகாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மது அருந்திவிட்டு ஏராளமானோர் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் நோயாளிகளாகவும், பெற்ற பிள்ளைகளையும், மனைவியையும் பெற்றோர்களை தாக்குதாகவும் இந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கடையை அகற்றக்கோரி 15 ஆண்டு காலமாக மக்கள் ப
ோராடி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 35 நாட்கள் இந்த மதுகடையை மூடக்கோரி முற்றுகை, தொடர் போராட்டம் நடத்தியும் பலன் இல்லாமல் மீண்டும் அரசு அதே இடத்தில் மதுக்கடையை மீண்டும் திறந்தது. இந்நிலையில் இன்று அந்த பகுதி பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு அதை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி பெண்கள் கூறும்போது, அரசு மதுபான கடையை அகற்றினால் போதும். 2500 ரூபாய் பணமும் வேண்டாம் வேறு எந்த இலவசமும் வேண்டாம், என்றனர். சாக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் கடை அருகிலே தொடர்ந்து போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டு வருவதால் மதுக்கடை அடைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026