
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
மேலாளர் மீது வழக்கு
எழுத்தாளர் Sivagangai Admin · 21 ஆகஸ்ட், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஆக.21-
காரைக்குடியில் வீடு கட்டும் உரிமையாளருக்கு டைல்ஸ் கொடுக்காமல், ஏமாற்றிய தனியார் டைல்ஸ் நிறுவன மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி கங்காதரன் தெருவை சேர்ந்தவர் நிர்மல் பவித்ரன். இவர் கழனிவாசலில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கு டைல்ஸ் பதிக்கும் பொருட்டு காரைக்குடி நூறடி ரோட்டில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் டைல்ஸ் ஆர்டர் செய்திருந்தார். அதன்படி அந்நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி ரூ.3,52,600-ஐ மனுதாரரின் அக்கவுண்டிற்கு கிரெடிட் கார்டு மூலமாகவும், ரூ.2,62,000 மற்றும் ரூ.90 ஆயிரத்தை ரொக்கமாகவும் அந்நிறுவன மேலாளர் மீனாள் பரிந்துரையின்படி கொடுத்துள்ளார்.
ஆனால் டைல்ஸ் நிறுவனம் உரிய நேரத்தில் பொருட்களை வழங்கவில்லை. இது குறித்து நிர்மல் பவித்ரன் அந்நிறுவனத்தில் நேரில் சென்று கேட்டபோது, நீங்கள் ஒப்பந்தகாரர் பிரபாகர் என்பவர் மூலம்தான் டைல்ஸ் எடுத்தீர்கள். எனவே நீங்கள் கொடுத்த பணத்தை அவர் கணக்கில் வரவு வைத்துவிட்டோம் என கூறியுள்ளனர்.
அவர்களிடம் நிர்மல் பவித்ரன், ‘‘பிரபாகர் வெறும் லேபர் ஒப்பந்தம் மட்டுமே போட்டுள்ளார். கட்டட பொருட்களை நான்தான் வாங்கி கொடுக்கிறேன். மேலும் பணம் கொடுக்கும்போது, பிரபாகர் நேரில் வரவில்லை. இது குறித்து எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை, என கேட்டபோது, நிறுவன மேலாளர் மீனாள், அவர்களிடம் ‘‘பிரபாகர் போன் செய்து அவரது கணக்கில் வரவு வைக்க கூறியதாக கூறினார், என கூறியதுடன், நிர்மல் பவித்ரனை தகாத வார்த்தையால் மிரட்டி, வெளியே அனுப்பியுள்ளனர். இது குறித்து நிர்மல் பவித்ரன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டதுடன், வாடிக்கையாளரை மிரட்டிய தனியார் டைல்ஸ் நிறுவனத்தின் மீதும் மேலாளர் மீனாள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026