முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

பதவி இழக்கும் காரைக்குடி மேயர் தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடி, செப்.1- காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மேயர் முத்து துரை தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்காதநிலையில், அவர் பதவி இழக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் (பொ) குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் சிலர் பேசுகையில், தங்களுக்கு தெரியாமலேயே ஒப்பந்தப்புள்ளி பணிக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், அந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது. மேலும் வேலை உத்தரவு வழங்காமலேயே பணிகள் நடக்கின்றன. அதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் முத்துத்துரை உடல்நிலை பாதிப்பால், பிப்.13, மார்ச் 10, ஜூன் 24 ஆகிய 3 கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கவில்லை. இதனால், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1996 பிரிவு 32(1) (j)-ன்படி தொடர்ந்து 3 கூட்டங்களில் மாநகராட்சி மேயர் பங்கேற்கவில்லை என்றால் பதவி இழக்க நேரிடும். மேலும், பிரிவு 32(4)-ன்படி கவுன்சிலராக பதவியில் மீண்டும் தொடர அனுமதிக்கலாம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேயராக முத்துத்துரை தொடர வேண்டுமென கூறி, இத்தீர்மானத்துக்கு திமுக உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாமன்ற கூட்டத்தில் திமுக 20 உறுப்பினர்கள், அதிமுக - 7, காங் - 3, கம்யூனிஸ்ட் - 1, சுயே - 2 பேர் என 33 பேர் கலந்து கொண்டனர். 1 பெண் சுயேச்சை உறுப்பினர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை