காரைக்குடியில் நேற்று இரவில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை - பொதுமக்கள் மகிழ்ச்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதிகள், கோவிலூர் , தேவகோட்டை ரஸ்தா, அரியக்குடி, இலுப்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் 30 நிமிடங்களுக்கு மேலாக இரவில் மழை பெய்தது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பகலில் வெப்பம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவில் சுமார் 30 நிமிடங்கள் மழை பெய்தது. இதனால் வெப்பமான சூழ்நிலை விலகி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.